வள்ளியூரில் நேற்று 2 சொகுசு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் சென்று சிகிச்சையில் இருப்பவர்கள் விவரங்களை கேட்டு அறிந்ததுடன் உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார்.