பச்சிளம் குழந்தைகளின் சுவாச பிரச்சினை, தூக்கக் குறைபாடுகளுக்கு ரெயின்போ மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம்

0
19

சென்​னை​யில் உள்ள ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில் பச்சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களின் சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

செவித்​திறன் இழப்​பு, சுவாச பிரச்​சினை​கள், தூக்​கக் குறை​பாடு போன்ற பாதிப்​பு​கள் குழந்​தைகளின் பேச்​சுத்​திறன், கல்​வி, வளர்ச்சி ஆகியவற்றை பாதிக்​கின்​றன.

இத்​தகைய சிக்​கல்​களுக்கு ஆரம்​பக்​கட்​டத்​திலேயே முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில், சென்னை கிண்​டி, அண்​ணாநகர் மற்​றும் சோழிங்​கநல்​லூரில் இயங்கி வரும் ரெயின்போ குழந்​தைகள் மருத்​து​வ​மனை​களில், பச்​சிளம் குழந்​தைகள் மற்​றும் சிறு​வர்​களுக்​கான காது, மூக்​கு, தொண்டை (இஎன்​டி) பிரச்​சினை​களுக்கு சிறப்பு சிகிச்சை மையம் தொடங்​கப்​பட்​டுள்​ளது.

இது பச்​சிளம் குழந்​தைகளுக்​கான சுவாச பிரச்​சினை, தூக்க குறை​பாடு​களை கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் சென்​னை​யில் முதல் பிரத்​யேக சிறப்பு சிகிச்சை மைய​மாகும்.

பின்​னணி பாடகி சைந்​தவி மற்​றும் திரு​வனந்​த​புரம் கிம்​ஸ்​ஹெல்த் மருத்​து​வ​மனை​யின் காது, மூக்​கு, தொண்டை சிகிச்சை நிபுணர் சுரேஷ் குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்​தனர்.

இந்த மையத்​தில் குழந்​தைகளின் சுவாச பாதையை மயக்க மருந்து கொடுக்​காமலேயே, மிக மெல்​லிய 1.2 மி.மீ எஸ்​டோஸ்​கோப் கருவி மூலம் பரிசோ​திக்​கும் வசதி அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம், புறநோ​யாளி​கள் பிரி​விலேயே மருத்​து​வர்​கள் பரிசோ​தித்​து, சிக்​கலான காது, மூக்​கு, தொண்டை பிரச்​சினை​களை முன்​கூட்​டியே கண்​டறிந்​து​விட முடி​யும்.

அதே​போல், காக்​லியர் இம்ப்​லான்ட், சைனஸ் பிரச்​சினை​கள், தலை, கழுத்​து, காது வீக்​கம் போன்​றவற்​றுக்​கும் சிகிச்​சைகள் இங்கு வழங்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்​து, மருத்​து​வ​மனை​யின் குழு​மத் தலை​வர் சி.குணசேகர் கூறுகை​யில், “குழந்​தைகளுக்கு ஒரே இடத்​தில் காது, மூக்​கு, தொண்டை பிரச்​சினை​களை கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் எங்​களது எண்​ணத்தை இந்த மையம் பிர​திபலிக்​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

குழந்​தைகளுக்​கான காது, மூக்​கு, தொண்டை சிகிச்சை நிபுணர் ஆர்​.நித்யா கூறுகை​யில், “குழந்​தைகளுக்கு ஏற்​படும் பல இஎன்டி பிரச்​சினை​கள் தற்​காலிக​மானவை என்று அலட்​சி​யப்​படுத்தப்படுகின்​றன. ஆனால், அவை நீண்​ட​கால பா​திப்பை ஏற்​படுத்​தக் கூடும். எனவே, இந்த பிரச்​சினை​களை விரைந்து கண்​டு​பிடிப்​பது அவசி​யம்​” என்​று தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here