திருவட்டாறு ஸ்ரீராமன்கோணம் அய்யா நாராயண வைகுண்ட செல்லப்பதியில் 10 நாட்கள் திருஏடு வாசிப்பு விழா நேற்று இரவு நிறைவடைந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு, அய்யா அலங்கார கருட வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் புடை சூழ காங்கரை, திருவட்டாறு பகுதிகளில் இந்த பவனி நடைபெற்றது. பொதுமக்கள் வீதியில் நின்று வரவேற்பு அளித்தனர். பணிவிடையாளர் வைகுண்டராஜன் தலைமையில் செல்லப்பதி அன்பர்கள் மற்றும் பெண்கள் இந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.















