கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலக்கலுங்கடியைச் சேர்ந்த கார்த்திக் (36) என்பவர் ஜூலை 19 அன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தன. போலீசார் நடத்திய விசாரணையில், அவரிடம் சிலர் தகராறு செய்தபோது அவர் கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் நேற்று 4 பேரை கைது செய்தனர்.














