கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஒழுகினசேரி போக்குவரத்து நெருக்கடியைக் காரணம் காட்டி, அரசுப் பேருந்துகளை அப்ட்டா மார்க்கெட்டிலிருந்து புத்தேரி பாதைக்கு போலீசார் திருப்பி விடுகின்றனர். ஆனால், அந்தச் சாலை வசதி சரியில்லாததால் குண்டும் குழியுமாக இருப்பதால் அரசுப் பேருந்துகள் பள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பேருந்துகளை வழக்கம்போல் ஒழுகினசேரி வழியாக அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.















