முஞ்சிறை: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்

0
187

நடைக்காவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜான் என்பவர் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: – தலைவராக இருந்த நேரம் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, 5 லட்சத்தில் கட்டிடம் கட்டினோம். தற்போழுது இந்த கட்டிடமானது பாதியளவில் நிற்கிறது. தற்போழுது இதற்கான வேலை ஆணை கேட்டேன். இதுவரை தரவில்லை. ஆகவே வேலை ஆணை தரும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here