இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை பத்மநாபபுரம் எம்.எல்.ஏ. செல்லசுவாமி சந்தித்து, குமரி மாவட்ட திருக்கோவில் ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு நேரில் வந்து திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திர்ப்பரப்பு மகாதேவர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களை ஆய்வு செய்து, தேவையான வளர்ச்சிப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். மனுவைப் பெற்ற அமைச்சர், கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.















