குலசேகரம்: ஓடு பஸ்ஸில் கண்டக்டரிடம் டிக்கெட்டுகள் அபேஸ்

0
622

மார்த்தாண்டத்தில் இருந்து தடம் எண் 89 எம் என்ற அரசு பஸ் நேற்று மாலையில் கோதையாறு நோக்கி சென்று கொண்டிருந்தது.   இந்த பஸ்ஸில் சர்ஜீத் (19) என்பவர் தற்காலிக கண்டக்டராக பணியிலிருந்தார்.   ஹரிஹர கிஷோர் டிரைவர் ஆக இருந்தார். இந்த பஸ்ஸில் எந்திரம் மூலம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கப்படுகிறது.

     இயந்திரம் பழுதடைந்ததால்  ரூபாய் 30 ஆயிரம்  மதிப்பிலான டிக்கெட் ஒரு பையில் வைத்து தனது இருக்கை அடியில் வைத்திருந்தார். பின்னர் பார்த்தபோது அதனை காணவில்லை. கண்டக்டர் பயணிகளிடம் விசாரித்தும்,   டிக்கெட் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர் திருடி சென்று விட்டனர். உடனடியாக சர்ஜித் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்து வருகின்றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here