பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரல்விளையைச் சேர்ந்த 25 வயதான பிளசிங் சஜு, இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், மங்கோலியாவில் நடைபெற்ற 11-வது ஆசிய பாரா டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த இவருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த நிதியுதவியை அளித்துள்ளார். நேற்று, பிளசிங் சஜு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.















