சென்னை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை திட்டம்

0
68

சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை​யில் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, சுமார் ரூ.10 கோடி​யில் முழு உடல் பரிசோதனை மையம் தொடங்​கப்​பட்​டது. கோல்டு (ரூ1,000), டைமண்ட் (ரூ.2,000), பிளாட்​டினம் (ரூ.3,000), பிளாட்​டினம் பிளஸ் (ரூ.4,000) என நான்கு வகை​யானபரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்படு​கின்​றன.

இது​வரை 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் முழு உடல் பரிசோதனை செய்​துள்​ளனர். தமிழகத்​திலேயே முதன்​முறை​யாக, கரு​வில் உள்ள குழந்​தை​யின் வளர்ச்​சியை அறி​யும் பரிசோதனைத் திட்​ட​மும் இங்கு சமீபத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதற்கும் நல்ல வரவேற்பு உள்​ளது. இந்​நிலை​யில், அடுத்த கட்​ட​மாக புற்​று​நோய் பாதிப்​பு​களை அறிவதற்​கான பரிசோதனைத் திட்​டம் தொடங்​கப்​பட​வுள்​ளது.

இதுகுறித்து மருத்​து​வ​மனை இயக்​குநர் மருத்​து​வர் ஆர்​.மணி கூறிய​தாவது: சமூகத்​தில் புற்​று​நோய் பாதிப்பு தற்​போது பரவலாக அதி​கரித்து வரு​கிறது. இதை கருத்​தில் கொண்டு இந்த மருத்​து​வ​மனை​யில் புற்​று​நோய்க்கு பிரத்​யேக​மாக மருந்​தி​யல், அறுவை சிகிச்​சை, கதிர்​வீச்சு சிகிச்​சை, வலி மற்​றும் நிவாரண சிகிச்​சை, இடை​யீட்டு கதிர்​வீச்சு சிகிச்சை உள்​ளிட்ட துறை​கள் செயல்​படு​கின்​றன. அதற்​கான அதிநவீன உபகரணங்​களும், மருத்​து​வக் கட்​டமைப்​பு​களும் இங்கு உள்​ளன.

அறிகுறிகள் தென்​படு​வதற்கு முன்​பாகவே, ரத்த பரிசோதனை​களை மேற்​கொள்​வதன் மூலம் புற்​று​நோயை ஆரம்ப நிலை​யில் கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கலாம். அதனால், இந்த மருத்​து​வ​மனை​யில் முழு உடல் பரிசோதனை மையத்​தில் புதி​தாக டைட்​டானி​யம் பரிசோதனை திட்​டத்தை அடுத்த சில தினங்​களில் அறி​முகப்​படுத்த இருக்​கிறோம்.

இதற்கு ரூ.2,500 கட்​ட​ணம் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த பரிசோதனை​யின் கீழ் 10-க்​கும் மேற்​பட்ட புற்​று​நோய் பாதிப்​பு​களை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிய முடி​யும். டைட்​டானி​யம் திட்​டத்​தில் விந்​தணு சுரப்​பி, கருப்​பை, கணை​யம், கருப்பை வாய், கல்​லீரல் உள்ளிட்டவை சார்ந்த புற்​று​நோய்​களை கண்​டறிவதற்​கான பரிசோதனை​கள் வழங்​கப்​பட​வுள்​ளன. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here