நாகர்கோவில் வடசேரி வாட்டர் டேங்க் ரோட்டின் பின்புறம் நேற்று குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதுடன், குடியிருப்பு தெருக்களுக்குள்ளும் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து உடைப்பைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
