‘கவனிப்பு மழை’யில் கிளைக் கழகச் செயலாளர்கள் – அதிரடியாய் ஆட்டத்தைத் தொடங்கிய அண்ணாச்சி!

0
52

தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை… பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி.

2021 தேர்​தலில் விருதுநகர் மாவட்​டத்​தில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யைத் தவிர்த்து மற்ற 6 தொகு​தி​களை​யும் திமுக கூட்​டணி கைப்​பற்​றியது. ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் வேட்​பாளர் வாக்​குப் பதிவுக்கு சில தினங்​களுக்கு முன்​ன​தாக திடீரென கால​மான நிலை​யில், அந்​தத் தொகு​தியை அதி​முக கைப்​பற்​றியது. இந்​தத் தொகு​தி​யில் அதி​முக வென்​றது அண்​ணாச்​சி​யின் அரசி​யல் சாணக்​கி​யத்​துக்கே சவாலாக அமைந்​தது.

இந்த நிலை​யில், கடந்த நவம்​பரில் விருதுநகருக்கு அரசு நிகழ்ச்​சிக்​காக வருகை தந்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திமுக நிர்​வாகி​கள் ஆலோ​சனை கூட்​டத்​தி​லும் கலந்து கொண்​டார். அப்​போது, “தி​முக 7-வது முறை​யாக ஆட்​சி​யமைக்க வேண்​டு​மா​னால் விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள 7 தொகு​தி​களி​லும் வெற்றி பெறு​வது அவசி​யம்” எனப் பேசி​னார். அத்​துடன் 2021-ல் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் திமுக தோற்​றதற்​கான காரணங்​களை​யும் கேட்​டறிந்த முதல்​வர், “இந்த முறை ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தியை கட்​டா​யம் நாம் கைப்​பற்ற வேண்​டும்” எனக் கூறி​னார்.

இதனையடுத்​து, திமுக-​வின் ‘பென்’ அமைப்பு நடத்​திய சர்​வே​யின் அடிப்​படை​யில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் நிறுத்த பேராசிரியை ஒரு​வரை திமுக தலைமை தேர்வு செய்து வைத்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். இதையடுத்தே சுறுசுறுப்​பாக களத்​தில் இறங்கி இருக்​கும் கே.கே.எஸ்​.எஸ்​.ஆர்​.ஆர் அண்​ணாச்​சி, இப்​போதே கட்​சி​யினரை தயார்​படுத்​தும் வித​மாக கிளைக் கழக நிர்​வாகி​கள் தொடங்கி நிர்​வாகி​கள் அத்​தனை பேருக்​கும் ‘அன்​பளிப்​பு​களை’ அள்​ளித் தந்து அசத்தி வரு​கி​றார்.

இதுகுறித்து பேசிய விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக நிர்​வாகி​கள் சிலர், “கடந்த முறை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் அதி​முக வெற்றி பெற்​றாலும் அதன் பிறகு நடந்த உள்​ளாட்​சித் தேர்​தலில் ஸ்ரீவில்​லிபுத்​தூர் நகராட்சி மற்​றும் 5 பேரூ​ராட்​சிகளை திமுக தான் கைப்​பற்​றியது. தேர்தலில் வென்ற அதி​முக கவுன்​சிலர்​கள் சிலரை​யும் திமுக-வுக்கு இழுத்து வந்​தார் அண்​ணாச்​சி. வத்​தி​ரா​யிருப்பு ஒன்​றிய குழு தலை​வர் பதவியை மட்​டும் அதி​முக கைப்​பற்​றியது. அந்​தத் தலை​வரை​யும் திமுக பக்​கம் சாய்த்து விட்​டார் அண்​ணாச்​சி.

இந்த முறை ஸ்ரீவில்​லிபுத்​தூரில் நிறுத்​து​வதற்​காக தலை​மையே பேராசிரியை ஒரு​வரை தேர்​வுசெய்து வைத்​து​விட்​ட​தாகப் பேச்சு அடிபடு​கிறது. அதுபற்றி அண்​ணாச்​சிக்​கும் தகவல் சொல்லி இருக்​கி​றார்​கள். அதனால் தான் இப்​போதே பரபரப்​பாக இருக்​கி​றார் அண்​ணாச்​சி. பூத் கமிட்டி நிர்​வாகி​கள் நியமனம், புதிய உறுப்​பினர் சேர்க்கை உள்​ளிட்ட பணி​களை கவனிக்க ஏது​வாக கிளைச் செய​லா​ளர்​களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்​கி இருக்கிறார் அண்​ணாச்​சி. சிட்​டிங் அதி​முக எம்​எல்ஏ மீது ஏராள​மான அதிருப்​தி​கள் இருப்​ப​தால் எப்​படி​யும் இம்​முறை ஸ்ரீவில்​லிபுத்​தூரை வென்​றெடுக்​காமல் விட​மாட்​டார் அண்​ணாச்​சி” என்​கி​றார்​கள்.

ராஜ​பாளை​யம் தொகுதி கடந்த 2 தேர்​தல்​களாக திமுக வசம் இருக்​கிறது. தனது மாவட்ட எல்​லைக்​குள் வரும் இந்​தத் தொகு​தி​யின் கிளைக்​கழக நிர்​வாகி​களுக்​கும் அண்​ணாச்சி அன்​பளிப்பு மழை பொழிய ஆரம்​பித்​திருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள். கே.கே.எஸ்​.எஸ்​.ஆரை​யும் தங்​கம் தென்​னரசுவை​யும் மருது சகோ​தரர்​கள் என புகழ்ந்​துரைப்​பார் ஸ்டா​லின். அந்த வகை​யில், அடுத்​த​தாக இளைய சகோ​தரர் எப்​போது ‘அன்பு மழை’ பொழி​வார் என ஆவலுடன் எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கி​றார்​கள் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக நிர்​வாகிகள்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here