நாகர்கோவிலில் நாய்களுக்கு உணவு வழங்க தனி இடம்.

0
219

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாய்களுக்கு ஆங்காங்கே உணவு வழங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. புத்தேரி மேம்பாலத்தின் கீழ் பகுதி மற்றும் அனந்தனார் கால்வாய் கரை போன்ற பகுதிகள் இதற்காக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாநகராட்சி சார்பில் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here