எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

0
16

மக்​களவை​யில் எதிர்க்​கட்​சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்​சலுக்கு இடையே, பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்​தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்​கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்​றப்​பட்​டது.

வினாத்​தாள் கசிவு தடுப்​புச் சட்ட மசோதா தொடர்​பாக மக்களவை​யில் நேற்று விவாதம் நடை​பெற்​றது. இதில், எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: “இந்​தி​யக் கல்வி முறையை ஆர்​எஸ்​எஸ் சீரழித்து வரு​கிறது. மத்தியக் கல்வி அமைச்​சகத்தை அந்த துறை​யின் அமைச்​சர் இயக்​க​வில்​லை. ஆர்​எஸ்​எஸ் தான் இயக்​கு​கிறது. மாணவர்​கள் உண்​மை​யை​யும் அறிவை​யும் தேடு​வதை ஆர்​எஸ்​எஸ் தடுப்பதோடு,தங்​களின் கற்​பனை​யான வரலாற்​றுப் பதிவு​களைப் படிக்​கு​மாறு கட்​டாயப்​படுத்​துகிறது.

கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ஒரு முகமூடி மட்​டுமே; மாணவர்​களின் உண்​மை​யான எதிரி ஆர்​எஸ்​எஸ் தான். கடந்த ஜூலை 20 அன்று நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​ தின் மீது நடத்​தப்​பட்ட அடக்​கு​முறை​களுக்கு அமித் ஷாவே காரணம். நாடாளு​மன்​றத்​துக்கு வந்து மாணவர்​கள் மீதான தாக்​குதல் குறித்துப் பேச உள்​துறை அமைச்​சருக்​குத் தைரியமில்​லை.” இவ்வாறு ராகுல் காந்தி பேசி​னார்.

இதுகுறித்து அமைச்​சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “மாணவர்​கள் மீதான தாக்​குதலுக்கு அமித் ஷா தான் உத்​தர​விட்​டார் என்​ப​தற்கு என்ன ஆதா​ரம் உள்​ளது ? எவ்​வித ஆதா​ர​மும் இன்றி எதிர்க்​கட்​சித் தலை​வர் இத்​தகைய கடுமை​யான குற்​றச்​சாட்​டு​களைச் சுமத்தக்கூடாது. அவர் தன் வார்த்​தைகளைத் திரும்​பப் பெற்​றுக்​கொண்டு மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என வலி​யுறுத்​தி​னார்.

இதனால் அவை​யில் மீண்​டும் அமளி ஏற்​பட்​டது. ஆளும்​கட்சி மற்றும் எதிர்க்​கட்​சி​யினரின் கடும் விவாதங்​களுக்கு மத்​தி​யில் வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா குரல் வாக்​கெடுப்பு மூலம் நிறைவேற்​றப்​பட்​டது.

மாநிலங்​களவை​யில் அமளி: நீட் மசோதா தொடர்​பாக நேற்று மாநிலங்​களவை​யிலும் அமளி நில​வியது. காங்​கிரஸ் தலை​வரும் மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மல்​லி​கார்​ஜுன கார்கே மற்​றும் சிபிஐ(எம்) எம்பி ஜான் பிரிட்​டாஸ் ஆகியோரின் குற்​றச்​சாட்​டு​களுக்​குப் பதிலளித்த மத்​திய அமைச்​சர் ஜே.பி.நட்டா, “காவல் ​துறை​யின் நடவடிக்கை சாதாரண சட்​டம்​-ஒழுங்கு பராமரிப்​பின் ஒரு பகு​தி​யே. போராடும் மாணவர்​கள் இது​போன்ற பிரச்​சினை​களை சந்​தித்து தான் ஆக வேண்​டும்” என்று நியாயப்​படுத்​தி​னார்.

தேசியப் பாடல் அவமதிப்பு மசோதா: தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா 2026 பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்காக மாநிலங்களவையில் நேற்று கொண்டுவரப்பட்டது. தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடல் அவமதிப்பைக் குற்றவியல் நடவடிக்கையாக மாற்றும் சட்ட மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த விவாதத்தின்போது ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பிற்கு மத்தியிலும் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here