தக்கலை அடுத்த மூலச்சலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், விடுமுறை முடிந்து திறக்கப்பட்டபோது தலைமை ஆசிரியர் அறை பூட்டு உடைக்கப்பட்டு 3 டேப்லெட்கள் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை ஆசிரியர் லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், கதவுகள் திறந்து கிடந்ததை அடுத்து தலைமை ஆசிரியர் விரைந்து வந்து பார்த்தபோது இந்த திருட்டு சம்பவம் தெரியவந்துள்ளது.















