நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ‘ஜீவ காருண்யா’ அறக்கட்டளை அலுவலகத்தில் மர்ம நபர் புகுந்து, சமூக சேவை செய்யக் கூடாது என்று கூறி மேலாளர் ஷீபாவைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் ஒரு வாரமாக நடவடிக்கை இல்லாததால், இன்று (ஜூன் 23) மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஷீபா நேரில் புகார் மனு அளித்துள்ளார்.















