இரணியல் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று சுங்கான்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் 49 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வடசேரி பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (36) மற்றும் சஜி (35) என்பது தெரியவந்தது. போலீசார் மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.















