மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த ரதி (43) என்ற தனியார் நிதி நிறுவன ஊழியரின் வீட்டில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பின்பக்க கதவை உடைத்து திருட முயன்றுள்ளார். ரதி சத்தம் போட்டதால் திருடன் தப்பி ஓடியுள்ளார். இது குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.















