இரணியல் பகுதியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தக்கலை பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றபோது, சிங்காரி மேளமடிக்கும் இசைக்கலைஞரான கதிஷ் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த மார்ச் 20ஆம் தேதி, கதிஷ் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது சிறுமி 2 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில், குளச்சல் மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கதிஷை நேற்று கைது செய்தனர்.















