கன்னியாகுமரி மாவட்டம் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெரின் (29) என்பவர், 2019 ஆம் ஆண்டு 9 வயது பள்ளி மாணவியை மாத்தூர் தொட்டிப்பாலம் சுற்றி காண்பிப்பதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நேற்று நீதிபதி, ஜெரினுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.















