தக்கலை பரைக்கோடு பகுதியைச் சேர்ந்த பிரனேஷ் பாரத் (43) என்பவர், மே 10ஆம் தேதி தான் பணிபுரியும் வக்கீல் அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















