நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் குப்பை சேகரித்துச் செல்லும் வாகனங்களை மேயர் மேரி பிரின்சி லதா நேற்று நேரில் ஆய்வு செய்தார். சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், குப்பைகளை முறையாக மூடிப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.















