பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவ மக்களிடம் திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் பேரூராட்சி தலைவியின் கணவர் ரமேஷ் தலைமையில் இந்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. திருவட்டார் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள், துண்டு பிரசுரம் விநியோகித்த ரமேஷ் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














