தக்கலை அருகே 12 ஆண்டுகளாக சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட முதியவரை குமரி மாவட்ட போலீஸ் நிமிர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். முதல் கட்ட பராமரிப்புகளை செய்து, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் மேல்பாலை காருண்யா மனநல மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் நிமிர் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.














