குளச்சல் பகுதியில் யாசகம் கேட்டு வாழ்ந்து வந்த முதியவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கால் புண் காரணமாக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று (ஏப்ரல் 17) அவர் உயிரிழந்தார். குளச்சல் போலீசார் அவரது உடலை மீட்டு பிணவறையில் வைத்துள்ளனர். மேலும், இறந்தவருக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














