வெற்றி வேட்​டையை தொடரும் முனைப்​பில் ஆர்சிபி – டெல்லி கேப்பிடல்​ஸ் உடன் இன்று பலப்பரீட்சை

0
43

ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) – டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

நடப்பு சாம்​பிய​னான ரஜத் பட்​டி​தார் தலை​மையி​லான ஆர்​சிபி மிக​வும் வலிமை​யான அணி​யாக உருவெடுத்துள்ளது. 5 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 4 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 8 புள்​ளி​களை குவித்து பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. பேட்​டிங்​கில் விராட் கோலி, பில் சால்ட், தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்டிதார், டிம் டேவிட் ஆகியோர் அபார​மான பார்​மில் உள்ளனர்.

இவர்​களில் ஒரு​வர் சிறப்​பாக விளை​யாடத் தவறி​னால் அதை மற்​றொரு​வர் தனது அதிரடி​யால் நிவர்த்தி செய்பவராக உள்​ளார். இது அணி​யின் மிகப்​பெரிய பலமாக உள்​ளது. பேட்​டிங் வரிசை​யில் டாப் 5-ல் அங்கம் வகிக்​கும் இவர்​களது அதிரடி​யான மட்டை வீச்சு பெங்களூரு அணி​யின் வெற்​றிகளுக்கு வலு​வான அடித்தளத்தை அமைத்​துக் கொடுத்​துள்​ளது.

இந்த ஐவர் கூட்​ட​ணி​யிடம் இருந்து மேலும் சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். இவர்​களில் ரஜத் படி​தார் தனது அபாரமான சிக்​ஸர் வேட்​டை​யின் மூலம் அனை​வரை​யும் வியப்​பில் ஆழ்த்​தி​யுள்​ளார். இது​வரை விளை​யாடிய 5 போட்​டிகளில் 21 சிக்​ஸர்​களை விளாசி, இந்த சீசனில் அதிக சிக்​ஸர்​கள் அடித்​தவர்​கள் பட்​டியலில் அவர் முதலிடத்​தில் உள்​ளார். இன்​றைய ஆட்​டத்​தில் டெல்லி அணி​யின் பந்​து​வீச்​சாளர்​களுக்கு ரஜத் பட்​டி​தார் நெருக்கடி கொடுக்​கக்​கூடும்.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்விகளுடன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. முதல் 2 ஆட்டங்​களில் வெற்றி பெற்ற அந்த அணி அடுத்​தடுத்த 2 ஆட்​டங்​களில் தோல்வி​களை சந்​தித்​துள்​ளது. பேட்​டிங்​கில் அனுபவம் வாய்ந்த கே.எல்​.​ராகுல், பதும் நிஷங்​கா, டிரிஸ்டன் ஸ்டப்​ஸ், டேவிட் மில்​லர், நித்​திஷ் ராணா ஆகியார் இருந்​தா​லும் இவர்​களிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை.

முதல் 2 ஆட்​டங்​களி​லும் தனது அதிரடி​யால் வெற்றி தேடிக்கொடுத்த சமீர் ரிஷ்​வி​யிடம் இருந்து கடைசி 2 ஆட்டங்​களி​லும் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவிலான மட்​டைவீச்சு வெளிப்​பட​வில்​லை. ஆல்ரவுண்டராக கேப்​டன் அக்​சர் படேலிடம் இருந்து எதிர்​பார்த்த அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. பேட்​டிங்​கில் அவர், வெறும் 3 ரன்​கள் மட்​டுமே எடுத்துள்ளார்.

அதேவேளை​யில் பந்​து​வீச்​சில் 3 விக்​கெட்​களே கைப்​பற்றி உள்​ளார். பிர​தான சுழற்​பந்து வீச்​சாள​ரான குல்தீப் யாதவும் பார்​மில் இல்​லை. 3 விக்​கெட்​கள் மட்​டுமே கைப்​பற்​றி​யுள்ள அவர், ஓவருக்கு சராசரி​யாக 10 ரன்​களை விட்டுக்​கொடுத்​துள்​ளார். வேகப்​பந்து வீச்​சாளர்​களான முகேஷ் குமார், நடராஜன் ஆகியோர் ஒரு சில ஆட்டங்களில் சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தனர்.

இந்த பந்து​வீச்சு கூட்​டணி ஆர்​சிபி அணி​யின் அதிரடி பட்​டாளங்​களை கட்​டுப்​படுத்​து​வது மிக​வும் கடின​மான​தாக அமையக்​கூடும். ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்​சாளர் ஜோஷ் ஹேசில்​வுட்டை உள்​ளடக்​கிய ஆர்​சிபி அணி​யின் பந்​து​வீச்​சு துறை மிக​வும் திறமை​யான ஒன்​றாகத் திகழ்கிறது.

சின்​ன​சாமி மைதானத்​தில் எப்​படிப் பந்​து​வீசி​னால் விக்​கெட்​டு​களை வீழ்த்த முடி​யும் என்​ப​தற்​கான துல்​லிய​மான ‘லைன் மற்​றும் லெந்த்’ முறையை அவர்​கள் கண்டறிந்துள்ளனர். டெல்லி அணி​யின் பேட்​டர்​கள் தங்களின் கிரிக்​கெட் நுணுக்​கங்​களை​யும் சாதுர்யத்தையும் முறை​யாகப் பயன்​படுத்​தத் தவறி​னால், சின்​ன​சாமி மைதானத்​தில் இதற்கு முன் நடந்த மூன்று போட்​டிகளைப் போல​வே, இந்​தப் போட்​டி​யும் பெங்களூருவுக்​குச் சாதக​மான ஒருதலைப்​பட்​ச​மான ஆட்ட​மாகவே அமையக்​கூடும்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here