சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபான கூடங்கள் வருகிற 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும், மே மாதம் 4ஆம் தேதியும் என மொத்தம் நான்கு நாட்கள் தற்காலிகமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














