குளச்சல் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்றும், இங்கு பக்தர்களின் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய விடுதி அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.














