கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று பூக்களின் விலை திடீரென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் 1250 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பிச்சிப்பூ நேற்று 2000 ரூபாயாகவும், 1100 ரூபாயாக இருந்த முல்லைப் பூ 1900 ரூபாயாகவும், 450 ரூபாயாக இருந்த மல்லி 150 ரூபாய் உயர்ந்து 600 ரூபாயாகவும் விற்பனையானது. இன்று பங்குனி உத்திரம் என்பதால் பூக்கள் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.














