குமரி மாவட்டம் பொற்றையடி பகுதியில் முட்புதரில் பிறந்து சில மணி நேரமான பச்சிளங் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. தென்தாமரைகுளம் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா (20) மற்றும் அவரது காதலன் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் காதலித்து, திருமணத்திற்கு முன் தகாத உறவில் பிறந்த குழந்தையை கொன்றதாக ஒப்புக்கொண்டனர். இருவரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.














