நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 70 வயதான தாசம்மாவிடம், அதே ஊரைச் சேர்ந்த ஷெரின் என்பவர் தனது 16 சென்ட் நிலத்தை விற்பதாகக் கூறி, வங்கி மூலம் ரூ. 8 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், நிலத்தை தாசம்மாவுக்குப் பதிலாக செல்வன் என்பவருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த தாசம்மா கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் செல்வன், ஷெரின், ஷாஜி ஆகிய மூன்று பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.














