விளவங்கோடு மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பயிற்சி முகாம் மார்த்தாண்டம் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான அழகுமீனா, பயிற்சி பெற்ற அலுவலர்களிடம் தேர்தல் பணிகள் குறித்து பேசினார். விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் ஈஸ்வரநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.














