நாகர்கோவில் அருகே கோணம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நேற்று, கல்லூரியில் புகுந்த முன்னாள் மாணவர் ஒருவர் அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் இந்தக் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














