குமாரகோவில் பகுதியைச் சேர்ந்த குமாரசுவாமி (71) என்பவரின் பெட்டிக்கடைக்கு தீ வைத்ததாக முருகன் மீது பத்மநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின்போது மனுதாரர் குமாரசுவாமி உயிரிழந்தார். அவரது மனைவி வள்ளியம்மாள் சாட்சியமளித்தார். நேற்று, நீதிபதி பரமசிவதாஸ், குற்றவாளி முருகனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.














