கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பிரசித்தி பெற்ற தூக்க திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் வகையில், வரும் மார்ச் 22, 2026 அன்று கோயில் பகுதியைச் சுற்றியுள்ள நித்திரவிளை, கொல்லங்கோடு, நடைக்காவு, ஊரம்பு பகுதிகளில் உள்ள நான்கு மதுபான கடைகளை முழுமையாக மூட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.














