கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 335 கோடியே 3 லட்சம் வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் மூலதனச் செலவாக ரூ. 282 கோடியே 59 லட்சமும், குடிநீர் மற்றும் வடிகால் நிதிச் செலவாக ரூ. 62 கோடியே 63 லட்சமும் என மொத்தம் ரூ. 345 கோடியே 22 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.














