கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தியதில் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் மூடப்பட்டதாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தமிழக முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் உத்தரவின் பேரில், நேற்று முதல் ரயில்வே துறை மற்றும் பாசனத்துறை உயர் அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பார்வையிட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














