நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் வாலிபர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














