குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தயார் செய்யும் கோயில் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் செத்து மிதப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.














