தூத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிள்ளியூர் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தூத்தூர் பங்கு பேரவை நிர்வாகிகள் நேற்று ஒருநாள் அடையாள சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பங்கு பேரவை பொருளாளர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் ஹிம்லர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முஞ்சிறை வட்டார செயலாளர் அலெக்ஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.














