மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே நேற்று மாலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து 3 பைக்குகள் மற்றும் பழக்கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. காரை ஓட்டிச் சென்ற அனிஷ் என்ற வாலிபர் குடிபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மார்த்தாண்டம் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














