டெஹ்ரானில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்: இந்தியத் தூதரகம் ஏற்பாடு

0
24

அணு ஆயுதம் தயாரிக்​கத் தேவை​யான யுரேனியத்தை செறிவூட்டி வரு​வ​தாகக் குற்​றம்​சாட்​டி, ஈரானில் கடந்த சனிக்​கிழமை முதல் அமெரிக்​க- இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.

இதையடுத்து ஈரானும் பல்​வேறு அமெரிக்க விமான தளங்​களை குறி​வைத்து பதில் தாக்​குதல் தொடுத்து வரு​கிறது. இந்​நிலை​யில் டெஹ்​ரான் நகரிலுள்ள இந்​திய மாணவர்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு இந்​தி​யத் தூதரகம் நேற்று மாற்​றி​யுள்​ளது. இதற்கான ஏற்​பாடு​களை அங்​குள்ள தூதரக அதி​காரி​கள் செய்துள்ளனர்.

இதுகுறித்து டெஹ்​ரான் நகரில் செயல்​பட்டு வரும் இந்​தி​யத் தூதரகம் சார்​பில் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறும்போது, “போர்ப்​ ப​தற்​றம் காரண​மாக டெஹ்​ரான் நகரிலுள்ள இந்​திய மாணவர்​களை பாது​காப்​பான இடங்​களுக்கு மாற்​றி​யுள்​ளோம்.

டெஹ்​ரானுக்கு வெளியே அமைந்​துள்ள இடங்​களில் அவர்​கள் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்​குத் தேவை​யான போக்குவரத்​து, உணவு, தங்​குமிட வசதி​கள் ஏற்​பாடு செய்யப்பட்டுள்​ளன. இந்த இடமாற்​றத்தை விரும்​பாத சில மாணவர்​கள் மட்​டும் டெஹ்​ரானிலேயே தங்​கி​யுள்​ளனர்” என்று ​ கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here