குமரி: கோவில் சமய மாநாடு; உயர்நீதிமன்ற நீதிபதி துவக்கினார்

0
26

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நேற்று தொடங்கியது. தொடர்ந்து 89வது சமய மாநாடு துவக்க நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். இளைய தலைமுறையினருக்கு பக்தியை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் உரையாற்றினார். வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்யானந்த மகராஜ், திருவனந்தபுரம் மேயர் ராஜேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here