நேற்று மார்த்தாண்டத்தில் ஷாஜி (32) என்பவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம், முஞ்சிறை பகுதியில் பிரேம்குமார் (62) ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். பிரேம்குமார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஷாஜி மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.














