மேல்புறம்: வளர்ச்சி பணிகளை துவக்கிய விஜய் வசந்த் எம் பி

0
118


மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்நோக்கு கட்டிடம் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை நேற்று விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். மேலும், பாகோடு பேரூராட்சி பகுதியில் இணைப்பு பாலம் மற்றும் பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 30 லட்சம் செலவில் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார் உட்பட ஏராளமான காங்கிரஸார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here