வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு நாகர்கோவிலில் நேற்று மாலை அனைத்து கட்சி சார்பில் மௌன அஞ்சலி இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்தார். அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் பங்கேற்றனர்.














