பிரதமர் மோடிக்கு இஸ்ரேலின் உயரிய விருது

0
16

பிரதமர் மோடி 2 நாட்​கள் பயண​மாக நேற்று முன்தினம் இஸ்​ரேல் சென்​றார். முதல் நாளில் இஸ்​ரேல் நாடாளுமன்​றத்​தில் அவர் உரை​யாற்​றி​னார்.

அப்​போது இஸ்​ரேல் அரசின் உயரிய விரு​தான நெசெட் பதக்​கம் பிரதமர் நரேந்​திர மோடிக்கு வழங்​கப்​பட்​டது. இஸ்​ரேல் அரசுக்​கும் யூத மக்​களுக்​கும் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பு​களை வழங்​கிய தனி​ நபர்​களுக்கு நெசெட் பதக்​கம் வழங்​கப்​படு​கிறது. இதன்​படி இஸ்​ரேல், இந்​தியா இடையி​லான உறவை வலுப்​படுத்​தி​யதற்​காக பிரதமர் மோடிக்கு நெசெட் வழங்​கப்​பட்​டது.

இது குறித்து அவர் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இந்த மரி​யாதை தனி​நபருக்கு அளிக்​கப்​படும் மரி​யாதை கிடையாது. இந்​தி​யா​வுக்​கும் இஸ்​ரேலுக்​கும் இடையி​லான நீடித்த நட்புக்கு அளிக்கப்​படும் மரி​யாதை ஆகும்” என்று தெரிவித்துள்ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here