குமரி: IT ஊழியரிடம் பல லட்சம் மோசடி; இளைஞர் கைது

0
51

நாகர்கோவிலைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர், வாட்ஸ்அப் குழுவில் இணைந்த பிறகு பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி ₹35 லட்சத்தை இழந்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் பீகாரைச் சேர்ந்த 19 வயது இளைஞரை நேற்று கைது செய்தனர். 2025 ஜூன் 17 அன்று நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஒரு லிங்க் மூலம் குழுவில் இணைந்ததும், அதில் உள்ளவர்கள் கூறியபடி பணத்தை முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. பணம் கிடைக்காததால் அவர் புகார் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here