குளச்சல் அருகே சின்ன முட்டம் நாராயணசாமிபதி கடற்கரை பாறை இடுக்கில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் சிக்கி கிடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சடலத்தை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. சுற்றுலா வந்தவர் கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














