நித்திரவிளை: பெட்டிக்கடையில் மூதாட்டி செயின் பறிப்பு

0
266

நித்திரவிளை அருகே எஸ்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் (72) என்ற மூதாட்டி நடத்தி வந்த பெட்டி கடைக்குள், நேற்று பகல் 12 மணியளவில் முகத்தை மூடியபடி பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் புகுந்து, அவரது கழுத்தில் கிடந்த நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியதில், தங்கத்தின் கழுத்தில் கிடந்தது கவரிங் நகை என்பது தெரியவந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here